Tuesday, November 24, 2009

குழந்தை வளர்ப்பு அவதானங்களும் சில குறிப்புகளும்

குழந்தை வளர்ப்பு என்பது குறித்து இன்று மிக அதிகமாக பேசப்படுகின்றது. அது பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற் கில்லை. ஏனெனில் இன்றைய குழந்தைகள்தான் நாளைய சமூகத்தின் வழி காட்டிகளாக திகழப் போகின்றார்கள்.

இன்றைய குழந்தைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வித்தியாசமானவை. அவர்கள் வாழ்கின்ற சூழலில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கவேண் டிய நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வழி காட்டுவதில் சில பெற்றோர் தவறிழைத்து விடுகின்றனர். இதனால் குழந்தை கள் தமது இளவயதிலேயே உள நெருக்கடிக்கு உட்படுகின்றனர்.

இஸ்லாம் குழந்தை வளர்ப்புக்கு தேவையான, போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. ஆனால், நவீன உலகில் குழந்தை வளர்ப்பிற் கென பல புதிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் காணப்படுகின்றன. இவை தனி மனிதர்களா லும் நிறுவனங்களாலும் வடிவமைக்கப்பட்டவை. இவற்றை பின்பற்ற முனை யும் முஸ்லிம் பெற்றோர் மது குழந்தைகளை தமது கைகளாலேயே அழித்துவிடும் துரதிஷ்டமான செயலைத்தான் செய்கின்றனர்.

இன்றைய நவீன உலகின் தாக்கங்கள் எமது குழந்தைகளின் நடத்தைகளிலும் செயற்பாடுகளிலும் வெளிப்படுவதை நாம் அன்றாடம் அவதானித்து வருகின் றோம். சில போது சில செயல்களினால் அதிர்ச்சியடைகின்றோம். அவற்றிற்கு தீர்வு சொல்ல முடியாதுதவிக்கிறோம். சிலபோது நாமே தீர்வுகளைத் தேடப் போய் குழந்தைகளை வழிகேட்டின்பால் இட்டுச் சென்றுவிடுகின்றோம்.

இன்று குழந்தைகள் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய பிரச்சினை அவர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையிலான உறவாகும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும். அவர்கள் சிறந்த முறையில் கற்றுத் தேற வேண்டும், உயர் பதவிகளைப் பெற வேண்டும் போன்ற நோக்கங்களுக் காக செயற்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு இயல்பாக தேவைப்படுகின்ற பல விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன.

கல்விக்காக வேண்டி சிலபோது பெண் பிள்ளைகளையும் வீட்டிற்கு வெளியே இரவில் அனுப்பக்கூடிய நிலை காணப்படுகின்றது. அவர்கள் போக்குவரத்து செய்வதிலும் வீட்டுக்கு திரும்பி வருவதிலும் பல்வேறு நெருக்கடிகளை அனுபவிக்கின்றனர். அவற்றை கவனத்திற்கொள்ள பெற்றோர் தவறி விடுகின் றனர்.

இன்று பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் காணப்படுகின்ற பல் வேறு பிரச்சினைகளுக்கான சில முக்கிய காரணங்கள் ஆய்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. பெற்றோருக்கு குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரமின்மை.

2. பொருளாதார நெருக்கடி (இதன் காரணமாக நீண்ட நேரம் தொழில் செய்ய வேண்டி ஏற்படுகிறது. வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் உறங்கியிருப்பர். மீண்டும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகள் உறக்கத்தில் இருப்பர்)

3. குழந்தைகளுடன் உரையாடல், கலந்துரையாடல் போன்றவற்றை மேற்கொள் ளாதிருத்தல்.

அண்மையில் பாடசாலையொன்றில் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் பரீட்சையில் மொழிப் பாடத்திற்காக வழங்கப்பட்டி ருந்த வினாத்தாளில் பின்வரும் வினா கேட்கப்பட்டிருந்தது. பிள்ளைகளின் மீதுள்ள பெற்றோரின் கடமையும் பெற்றோரின் மீதுள்ள பிள்ளைகளின் கட மையும் பற்றி பத்து வரிகள் எழுதுக.

இவ்வினாவிற்கு விடையளித்த 80% இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்கள்: குழந்தைகள் மீதுள்ள பெற்றோரின் கடமை அவர்களுக்கு கல்வி புகட்டுவதும் அதனை மீட்டச் செய்வதுமாகும். பெற்றோர் மீது பிள்ளை களுக்குள்ள கடமை சிறந்த முறையில் கற்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்து வதாகும்.

இவ்விடை மூலம் இன்று பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமி டையில் காணப்படுகின்ற உறவு கல்வியுடன் சுருங்கியிருப்பதை தெளிவாக உணர முடிகின்றது. குழந் தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஏனைய உரிமைகளில் பெற்றோர் கவனயீனமாக இருக்கின்றனர்.

இஸ்லாம் குழந்தைகளுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதை கடமையாக்கி யுள்ளது. அத்துடன் நீச்சல் போன்ற விளையாட்டுக்களையும் பயிற்றுவிக்கு மாறு ஊக்குவித்துள்ளது. அவர்களுக்கும் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்க ளுக்கு மிடையிலான உறவையும் அயலவர் களுக்கிடையிலான உறவையும் ஏற்படுத்துமாறு கூறியிருக்கின்றது. ஆனால், இந்நிலமைகளை இன்று காண முடியாதுள்ளது.

பெரும்பாலான குழந்தைகளுக்கு தமது பெற்றோரை தவிர வேறு உறவுக ளைத் தெரியாது. சிலவேளை பாடசாலை பாடங்களை கற்றுக் கொடுக்கவரும் ஆசிரியரை அதிகமாக தெரிந்திருக்கும். அவர்தான் வீட்டிற்கு வரும் ஒரே யொரு விருந்தாளியாக இருப்பார்.

இதனால் குடும்பம் சமூகத்திலிருந்தும் ஏனைய குடும்பங்களிலிருந்தும் ஒதுக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு சமூகத்துடன் உரையாடுவதற்கான, பழகு வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. அவர்களுக்குள் ஏக் கம் குடிகொண்டிருக்கின்றது. அவர்கள் சிறுவயதிலேயே நோயாளிகளாக மாறி விடுகின்றனர். சிறியதொரு தடிமலிலும் அவர்கள் சோர்ந்துவிடுகின் றனர்.

இங்குதான் இஸ்லாம் வழிகாட்டியுள்ள குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் தெளிவாகின்றது. குழந்தைகளின் உலகம் விசாலமானது. அவர்களின் கனவுக ளும் விசாலமானது. அவர்கள் அடைய விரும்புகின்ற இலக்குகளும் உயர்ந் தது. ஆனால் அவற்றை நாம் எமது விருப்புக்களினால் சுருக்கிவிடுகின்றோம். அல்லது அழித்துவிடுகின்றோம்.

நாம் வரலாற்றில் மிக இள வயதில் சாதனைகள் செய்த பலரை கண்டிருக் கின்றோம். இன்றும் கண்டு வருகின்றோம். ஆனால், எமது பிள்ளைகள் அந்த சாதனையாளர்களில் ஒருவராக வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் நவீன முறைகளால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். எனவே, எமது குழந்தைகளை ஆளுமையுள்ளவர்களாக வளர்த் தெடுப்பதற்கு பின்வரும் விடயங் களில் நாம் இதன்பிறகாவது கவனம் செலுத்த வேண்டும்.

1. அல்குர்ஆன், ஸுன்னா கற்றுத் தருகின்ற பயிற்றுவிப்பு முறைகளை தேடி கற்க வேண்டும்.

2. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக்கட்டங்களிலும் மார்க்கக் கல்வியை கற்பிப்பதற்கு மறக்கக் கூடாது.

4. குடும்ப உறவினர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல், அவர்களை அடிக்கடி சந்தித்தல்.

5. குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகளை, விளையாட்டுக்களை கற்றுக் கொடுத்தல்.

6. குழந்தைகளுடன் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுதல்.





நன்றி: மீள்பார்வை
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக்குரல்

- - - - -

பயணம்
ஆன்மீக அமர்வுகளுக்கான இதழ்
வைகறை
இஸ்லாமிய குடும்ப சஞ்சிகை
சர்சதேச பார்வை
சர்வதேச விவகாரங்களுக்கான இஸ்லாமிய இதழ்


NewsView
ஒரு புதிய பார்வை

Saturday, August 1, 2009

டார்வினிசம்

டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மாதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இய
ற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது.

ஷமனர்கள் அவர்கள
து சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.

வானியல், உயிரியல், பௌதீகவியல், புவியியல், கருவியல் போன்ற அனைத்தும் விஞ்ஞானம். ஆனால் டார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல, அது பண்டைய ஷமன மதமாகும்.

டார்வினிஸ்டுகளின் தற்போதய நம்பிக்கை முற்காலத்தில் முதலைகளை வணங்கியவர்களின் நம்பிக்கையை போன்றது. டார்வினிஸ்டுகள் தற்செயலாக, அசைவற்ற, உணர்வற்ற அணுக்களை உருவாக்கும் சக்தியாக கருதுவதால், மதத்தை நம்புவதை போன்று அதை நம்புகின்றனர்

பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், விஞ்ஞான கிளைகளில் (உயிரியல், பௌதீகவியல்) ஏற்பட்ட முன்னேற்றம்
ஒன்றன் பின் ஒன்றாக அக்கோட்பாட்டின் கருத்துகளை வேரறுத்து விட்டது. இருப்பினும் இன்றும் டார்வினிசம் சீடர்களை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு விஞ்ஞான கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டவுடன், அது ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நிறத்தப்பட்டுவிடும். ஆனால் டார்வினிசத்தில் அவ்வாறு நிகழவில்லை. டார்வினிஸ்டுகள் தங்களது கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகள் மறுக்க முடியாது வலுப்பெற்றிருந்த போதிலும் டார்வினிஸ்டுகள் அதை புறந்தள்ளி விட்டு தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கையை நிலைநாட்ட கடுமையாக முயற்சிக்கின்றனர்.

நெருப்பு, நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றை வணங்குவது, பிரமிட்டுகள் வேற்று கிரகவாசிகளால் கட்டப்பட்டது என்று நம்புவது, சில குறிப்பிட்ட மிருகங்களை புனிதமாக கருதுவது விஞ்ஞானமல்ல. அதே போன்று டார்வினிசமும் - மற்ற மூடநம்பிக்கை காரணமாக, டார்வினிசமும் சிலைகள் மற்றும் பொய்யான கடவுள்களை கொண்ட மதமாகும்.

டார்வினிஸ்டுகளின் மிக முக்கிய சிலை தற்செயல் என்ற சிலையாகும். டார்வினிஸ்டுகளின் எந்த ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்தாலும், அதில் டார்வினிஸத்தின் உயிர்நாடியான - இயற்கை தெரிவின் எல்லையற்ற சக்திகளை அறிந்து கொள்வீர்கள்.

தற்செயல் என்ற சிலை செய்யும் அனைத்து செயல்களும் மிகச்சரியாக கணக்கிடப்பட்டுள்ளது என்று பரிணாமவாதிகள் கூறுகின்றனர். அவர்களுடை
ய பார்வையில் அந்த சிலை நிகழ்த்தப் போகும் அனைத்து செயல்களையும் ஏற்கனவே நன்கு திட்டமிட்டு கணக்கிட்டுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு வசித்திரமான சக்தியில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் பொருளுக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுக்கின்றனர். முற்காலத்தில் பொருள் தன்னை இணைத்து ஒரு உயிருள்ள செல்லாக உருவானது. பிறகு அது முற்றிலும் வித்தியாசமான இன்னொன்றை உருவாக்கியது என்று நம்புகி
ன்றனர். விஞ்ஞானம் இத்தகைய சிந்தனைகளை மறுக்கிறது. ஆனால் டார்வினிஸ்டுகளை பொருத்தவரையில் அவை மறுக்க முடியாத உண்மைகள் என்றும் அதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

டார்வினிஸம் என்பது மடமையான, பகுத்தறிவிற்கு முரணான, பிழையான பண்டைய ஷமன மதமாகும். இந்த சிலை வணக்கம் இஸ்லாத்தை எதிர்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

டார்வினிச ஷமன மதத்தை பொருத்தவரையில் நிலம், நீர், பாறை மற்றும் கல் அனைத்தும் உணரும், கேட்கும், நிறங்களை பார்க்கும் சக்தி படைத்தவை
.

டார்வினிச மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான தற்செயல் எனும் மடமையான நம்பிக்கையானது விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் எதிரானது. உண்மையில் எந்த ஒரு பகுத்தறிவுள்ள சிந்தனையும் மிக சிக்கலான ஒரு அமைப்பு தற்செயலாக உருவாக முடியாது என்பதை ஏற்று கொள்ளும். அதற்கு மாறாக அவ்வாறு சிக்கலான அமைப்பு உருவாவதென்றால் நிச்சயமாக அதில் அறிவார்ந்த ஒரு பெரும் சக்தியின் திட்டம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. இருப்பினும் தங்களது கைகளால்
சிலைகளை வடிவமைத்து அதற்கு பெயர் சூடி அதற்கு உண்ண உணவு கொடுத்து பின்பு அதை வணங்குபவர்களை போன்று டார்வினிஸ்டுகளும் பொய்யான கடவுள்களில் நம்பிக்கை வைத்தள்ளனர்.

டார்வினிஸ்டுக்ள ஏற்று கொண்ட மடமையான நம்பிக்கை பண்டைய பல தெய்வ வணங்கிகளின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையோடு தொடர்புபட்டுள்ளது. பண்டைய பல தெய்வ வணங்கிகள் அசைவற்ற சிலைகள் தான் அனைத்தையும் படைத்தன என்று நம்பினார்கள். அதை போன்று தான் பரிணாமவாதிகள் அசைவற்ற பொருள் அனைத்து உ
யிரினங்களையும் படைத்துள்ளன என்று நம்புகின்றனர். (நிச்சயமாக இறைவன் இதை விட்டும் தூயவன்). அவர்களது உடலும் பல தற்செயலான செயல்களால் உருவானது என்று வாதிடுகின்றனர்.

டார்வினிச ஷாமன மதத்தை விஞ்ஞானம் என்ற போர்வையில் மாணவர்களுக்கு கற்பிப்பது ஏற்று கொள்ளமுடியாதது. இந்த ஷாமன மதத்திலிருந்து விடுப்பட்ட உயிரியலே அவர்களுக்கு தேவை.

துருக்கி பொது மக்கள் அவர்களது நாட்டிலுள்ள பரிணாமவாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளை எள்ளி நகையாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களால் பரிணாம வளர்ச்சி திட்டத்தை ஆக்ரோஷமாகவும் பிழையாகவும் நிறுவ முடியாமையாகும். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அவர்கள் சமர்பிக்க வேண்டும், அதன் மூலம் அனைவரும் அவற்றை ஆராயந்து சரியானவைகளையும் பிழையையும் பிரித்தரிய முடியும். நாடு முழுவதும் காண்பிக்கப்பட்ட படிமங்கள் மூலம் உயிரினங்கள் பரிணாமம் அடையவில்லை என்பதை துருக்கி மக்களை உணர்ந்து கொண்டனர்.

பரிணாமவாதிகளிடம் படிமங்கள் ஏதாவது இருப்பின் அவற்றை பொது காட்சிக்கு வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றையாவது மத்திய நிலையங்கள் அல்லது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். அவர்களால் முடியாவிட்டால் அவர்களது முட்டாள்தனமாக பரிணாமத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். மக்களிடம் காண்பிக்க அவர்களிடம் இடை நிலை படிமங்கள் இல்லை. ஏனெனில் அத்தகையவைகள் ஒருபோதும் தோன்றவில்லை.

பரிணாமத்தை நிரூபிப்பதற்காக பரிணாமவாதிகள் முன்வைத்த ஒவ்வொரு படிமமும் பொய்யானவை அல்லது பிழையாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பில்டவுன் மனிதன் என்பது கட்டுக்கதையானது. நேப்ரஸ்கா மனிதனின் பல் கரடியின் படிமத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அழிந்து போன உயிரினம் என்று கூறப்பட்ட கொல்கான்ந்த் என்ற மீன் உயிருடன் பிடிப்படடு 1938 முதல் மாற்றமடையாமல் இருக்கிறது. மனித பரிணாமம் என்ற கட்டுக்கதைக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இன்றைய மனிதனுடையது அல்லது அழிந்து போன குரங்கு இனத்துடையது என்பது நிரூபணமாயுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு போதும் தோன்றியிராத உயிரினங்களை கற்பனை செய்து ஓவியர்களை வாடகைக்கு அமர்த்தி புதிய அமைப்புகளை வரைந்து அவற்றை கொண்டு பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞான உண்மை என்பதாக மக்களை நம்ப வைக்க முற்படுகின்றனர். இந்த பொய்யான தகவல்கள் பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் மற்றும அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதை அதனை உருவாக்கியவர்களின் கற்பனை தவிர வேறில்லை. இவற்றை படிமங்களில் காண முடியவில்லை. பரிணாமவாதிகள் அவர்களின் கைகளால் படைக்கபட்ட பொய்யான தகவல்களில் இறுதியாக விழுந்து இந்த பொய்யான டார்வினிச மதத்தை நம்புகின்றனர்.

டார்வினிஸ்டுகளின் ஷாமன மத கருத்துகளை விஞ்ஞானம் மறுக்கிறது.


டார்வினிச ஷாமன மதம் கூறுகிறது

நவீன விஞ்ஞானம் கூறுகிறது.

முதல் உயிரினம் தற்செயலாக உருவானது

உயிரினங்கள் தற்செயலாக உருவாக முடியாது. ஒரு தனி புரதமோ அல்லது ஒரு சாதாரண செல் அல்லது முழு உயிரினமும் தற்செயலாக உருவாகவே முடியாது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு புரதம் தற்செயலாக உருவாவது என்பது 10950 இல் 1 என்ற சாத்திய வீதத்திலாகும். நடைமுறையில் இது பூஜ்ஜிய சாத்திய வீதமாகும். அதாவது ஒருபோதும் நிகழாது.
உயிரினங்கள் முன்னைய அபிவிருத்தி அடையாத மூதாதையரிலிருந்து தோன்றியது

ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் தோன்ற முடியாது. ஓவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குறிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் படிப்படியாக மாற்றமடைந்து ஒரு புது உயிரினமாக தோன்ற முடியாது

படிமங்கள் பரிணாம வளர்ச்சி திட்டத்தை உறுதிப்படுத்துகிறது

படிமங்கள் பரிணாம வளர்ச்சியை மறுத்து அனைத்தும் படைக்கப்பட்டன என்பதை காட்டுகிறது. சுமார் 1000 லட்சம் படிமங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் முழுமையடைந்த நன்கு அபிவிருத்தியடைந்தை காட்டுகின்றன. ஒரு படிமத்தில் கூட அது பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை

மாற்றங்கள் மூலம் பல உயிரினங்கள் தோன்றின

மாற்றங்கள் உயிரினங்களை அழிக்குமே தவிர அதை வேறொரு உயிரினமாக மாற்றாது. அவ்வாறு மாற்றமடைந்தால் அந்த உயிரினம் அழிந்துவிடும் அல்லது முடமாகிவிடும்

மனிதன் குரங்கு போன்ற உயிரினங்களிலிருந்து பரிணாமம் அடைந்தான்

மனிதனும் குரங்கும் மிகவும் வித்தியாசமான உயிரினங்கள். அவற்றுக்கிடையே எந்தவித குடும்ப ஒற்றுமையும் கிடையாது. உருவ ஒற்றுமை இருந்த போதிலும் அவற்றுக்கிடையே மலையளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை பரிணாமத்தை கொண்டு விளக்க முடியாது

இயற்கையில் காணப்படும் இயற்கை தெரிவு பரிணாமத்திற்கான சான்று

இயற்கை தெரிவு மூலம் பரிணாமமோ அல்லது வேறொரு புது உயிரினமோ தோன்ற முடியாது


பரிணாமவாதிகளின் இரண்டு பொய்கள்: டிக்டாலிக் ரோசியா மற்றும் குகுனாசஸ்

சில மாதங்களுக்கு முன் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டு டிக்டாலிக் ரோசியா என்று பெயரிடப்பட்ட இந்த படிமம் பரிணாம வளர்ச்சிக்கு பெரும் சான்றாக பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையில் இந்த உயிரினம் பல உயிரினங்களின் பண்புகளை கொண்ட மொசாயிக் உயிரினமாகும். இருப்பினும் பரிணாமவாதிகள் பிழையான படங்களை காட்டி இது நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்தது என்பதை நிரூபிப்பதற்காக இந்த உயிரினத்தை இடை நிலை உயிரினம் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இன்று அவுஸ்திரேலியாவில் காணப்படும் பிளாடிபஸ் என்ற உயிரினம் இதை போன்ற மொசாயிக் இன உயிரினமாகும். மோசாயிக் உயிரினம் என்பது மிருகங்கள், ஊர்வன மற்றும் பறவைகளின் பண்புகள் ஒரே நேரத்தில் ஒரு உயிரினத்தில் இணைந்து காணப்படுவதாகும். இதை பரிணாமத்திற்கான சான்றாக கொள்ள முடியாது.
சில நாட்களுக்கு முன்னர் பல வருடங்களாக விடுபட்ட இடை நிலை என்ற அவர்களின் கற்பனை கதைக்கு உயிரூட்ட பரிணாமவாதிகள் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு படிமத்துடன் வந்துள்ளனர். குகுனாசஸ் என்ற இந்த புதிய படிமம் உண்மையில் அழிந்து போன ஒரு வகை மீன் இனமே தவிர பரிணாமத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதன் வால் பக்கத்தில் முள் இருப்பதால் அதை பரிணாமவாதிகளின் நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்த கட்டுக்கதைக்கான சான்றாக உபயோகிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் படிமத்திலுள்ள உயிரினம் நில உயிரினங்களுடன் முற்று முழுதாக தொடர்பில்லாமல் இருக்கிறது. இன்றும் உயிருடன் இருக்கும் கொலகொன்ந்த் இன மீன்களுக்கு வால் பக்கத்தில் முள் இருக்கிறது. இருப்பினும் இது மீனின் உடலிலுள்ள சாதாரண அமைப்பு என்றும் நீந்துவதற்கு மட்டுமே இதை உபயோகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரிணாமவாதிகள் அவர்களின் கற்பனைகளை நிரூபிப்பதற்கு பாதி விருத்தியடைந்த ஆனால் முற்று முழுதாக இயங்க முடியாத இடைநிலை அமைப்புகளை (iவெநசஅநனயைவந கழசஅள) கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும் இந்த படிமங்களிலுள்ள உயிரினங்களின் உறுப்புகள் ஒவ்வொன்றும் குறைபாடுகளற்ற முற்று முழுதாக விருத்தியடைந்து காணப்படுகிறது. அங்கு பாதி விருத்தியடைந்த உறுப்புகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. படிம வரிசையில் ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை.
பரிணாமவாதிகள் தங்களது பிழைகளை ஏற்று கொண்டு பொது மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட வேண்டும்.

சுயநல பரிணாமவாதிகளின் புதிய சதி வலைகள்

சமீப காலமாக துருக்கி மற்றும் உலக மீடீயாக்களில் உலகலாவிய ரீதியில் டார்வினிசத்தின் தோல்வியை பற்றி அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளன. பரிணாமம் தோற்கடிக்கபட்டமை ஜரோப்பிய ப்ரீ மேசன் மற்றும் இதர இரகசிய சக்திகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைகள் நாத்திகம் தோற்கடிக்கபட்டு விடும் என்ற பயத்தில் பெரும் சதிவலை பின்னுகின்றன. பிரித்தானிய மற்றும் பிரஞ்சு செயலில் இறங்கியுள்ளன. பழிதீர்பதற்காக சபாதிய குடும்பங்கயுளும் இதில் ஈடுபடுகின்றன. பல எழுத்தாளர்கள் வாடகைக்கு அமர்தப்பட்டு பெரும் சதி செய்யப்படுகிறது. இதில் முக்கிய குறியாக கருதப்படுவது விஞ்ஞான ஆய்வு கழகமாகும்.
எதிர்காலத்தில், இறந்த காலத்தை போன்று இவை பலன் தரப்போவதில்லை. மில்லியன் கணக்கான மக்கள் தற்போது நடந்து கொண்டிருப்பவற்றை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒரு புதிய சூரியன் உதயமாகிவிட்டது. அதன் ஒளி உலகம் முழுவதும் ஒளியூட்டுகிறது. உண்மையை ஏற்று கொள்வது தான் பரிணாமவாதிகளுக்கு எஞ்சியுள்ள ஒரு விருப்பாகும்.

இஸ்லாம் பல தெய்வ வணக்கங்களை தான் எதிர்கிறது : விஞ்ஞானத்தை அல்ல. விஞ்ஞானத்தின் அனைத்து கிளைகளையும் பரிசோதித்து ஆய்வு செய்யுமாறு மக்களை வற்புறுத்துகிறது :

..............வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து ....... (சூரத் ஆல-இம்றான் : 191)

மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (சூரத் காப்ஃ : 6)

...............(மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்¢ பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்!....... (சூரத் முல்க் : 3)

ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று - வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும - மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? - பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (சூரத் காஷியா 17-20)

நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (சூரத் ஜாஸியா 3-4)

ஆகவே விஞ்ஞானத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்பு இல்லை என்று கூற முடியாது.
இஸ்லாம் பொய்யான மதங்களை எதிர்கிறது. அது நெருப்பு, மிருகங்கள், சிலைகள் - போன்றவற்றை வணங்குவதை எதிர்கிறது. சுருங்க சொன்னால், அனைத்துவித பலதெய்வ கொள்கைகளையும் எதிர்கிறது. ஷாமன மதம் இயற்கையையும் (மிருகங்கள், தாவரங்கள், கற்கள், பூமி, அணு) மற்றும் தற்செயலையும் (change) வணங்குகிறது. டார்வினிசம் ஷாமன கோட்பாடுகளை கொண்டிருப்பதால் அது இஸ்லாத்துடன் மோதுகிறது.

நன்றி: http://www.harunyahya.com/

'Tamilish'


Tuesday, July 21, 2009

நீர் : அல்லாஹ்வின் அருட்கொடை

''நாம் வானத்திலிருந்து அளவுடன் தண்ணீரை இறக்கிவைத்தோம். பின்னர் அதனைப் பூமியில் நாம் தங்க வைத்தோம். அதனைப் போக்கிவிடவும் நாம் ஆற்றலுடையோர் ஆவோம். மேலும், அதனைக் கொண்டு பேரீச்சை, திராட்சை முதலிய தோப்புகளையும் நாம் உங்களுக்காக உற்பத்தி செய்தோம். அவைகளில் உங்களுக்கு வேண்டிய அநேகமான கனி வர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுகிறீர்கள்.'' (ஸுறா அல் முஃமினூன் 18,9)

நிலத்தினடியிலுள்ள நீரானது மேலிருந்து பொழிகின்ற மழை நீரினால் உருவாகின்றது என்ற உண்மை மிக அண்மைக்காலக் கண்டுபிடிப்பாகும். பெய்யும் மழை நீருக்கும் நிழத்தினுள்ளே இருக்கும் நீருக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பது சமீபகாலம் வரை நிலவி வந்த கருத்தாகும். ஆனால் அல்குர்ஆனோ திட்டவட்டமாக இந்த உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எத்துனை அழகாகக் குறிப்பிட்டிருக்கின்றது.!



''நாம் வானத்திலிருந்து திட்டமிட்ட அடிப்படையில் அளவுடன் நீரை இறக்கினோம்''

அதாவது, அழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மிதமிஞ்சிய நீரை இறக்காமலும் வரட்சியும் நீர்ப்பற்றாக்குறையும் ஏற்படும் விதத்தில் குறைந்த அளவு மழையை இறக்காமலும் பொருத்தமற்ற நேரத்தில் மழை பொழியச் செய்து நீரைப் பயனற்றதாக ஆக்கி விடாமலும் திட்டமிட்ட அடிப்படையில் அளவுடன் இதனை இறக்குகின்றோம் என்பது இதன் கருத்தாகும்.

''பின்னர் அதனைப் பூமியினுள்ளே தங்க வைத்தோம்.''

மழையாகப் பொழிந்த நீரே பூமியினுல் இருந்து பெறப்படுகின்றது என்ற உண்மை இதன் மூலம் தெளிவாகின்றது.

தமது வல்லமையைக் கொண்டு நீரைப் பூமியினுள் தேக்கி வைத்துள்ள அல்லாஹுத்தஆலா, தான் நாடினால் அதனைப் போக்கிடவும் சக்தியுடையவனாவான். இதனையே அல்லாஹ்:

''அதனைப் போக்கிடவும் நாம் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கின்றோம்'' என்று கூறுகின்றான்.

தண்ணீரே வாழ்க்கைக்கு அடிப்படையான ஆதாரமாகும். அதிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. இவ்வுண்மையை வசனத்தின் அடுத்த தொடர் விளக்குகின்றது.

''மேலும், அதனைக் கொண்டு (அதவது நீரைக் கொண்டு) பேரீச்சை, திராட்சை முதலிய தோப்புக்களையும் நாம் உங்களுக்கு உற்பத்தி செய்தோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய அநேகமான கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்'';

இங்கு, தாவர உலகில் நீரைக் கொண்டு உயிர் பெறும் பேரீச்சை, திராட்சை ஆகிய இரண்டு பழ வர்க்கங்களை அல்லாஹ் உதாரணமாகக் கூறியுள்ளான். தொடர்ந்து வரும் வசனத்தில், நீரினால் வளரும் ஸைதூன் மரத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளான். மனிதன் இந்திரியம் எனும் நீர்த்துளியினால் உருவாகியது போல், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரை அடிப்படையாகக் கொண்டே தோன்றின என்பது ஒரு பேருண்மையாகும்.



உலகில் அனைத்து உயிரினங்களதும் வாழ்வு நீருடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. பூமியின் மேற்பரப்பில் 70 வீதம் நீராகும். மண்ணுடன் சேர்ந்தும், பூமிக்கு அடியிலும், காற்றிலும், எல்லா உயிரினங்களிடத்தும் நீர் காணப்படுகின்றது. மனித உடலில் 70 வீத நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மேலும், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களிலும் காய் கறிகள், பழங்கள் முதலியவற்றிலும் நீர் இருக்கின்றது.

இந்த உண்மையை மற்றுமொரு திருவசனம் மிக அழகாக குறிப்பிடுகின்றது:

''நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்'';

நவீன விஞ்ஞானிகள் மிகப் பெரியதொரு கண்டுபிடிப்பாகக் கருதப்படக் கூடிய இந்த உண்மையை அல்குர்ஆன் எத்துனை அழகாக, எழிமையாகக் குறிப்பிட்டுள்ளது என்பதனைக் கவனிக்க வேண்டும்.

உயிரினங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாகவும் மூலமாகவும் தண்ணீர் அமைந்தது என்ற உண்மையை உலகுக்கு நிறுவிய பெருமை டாவினைச் சாரும் என்று கூறி, அவரைப் பாராட்டும் விஞ்ஞான உலகம், அல்குர்ஆன் இந்த உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகச் சாதாரணமாக கூறியிருப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிசயத்திலும் அதிசயமாகும்.

அல்குர்ஆனின் இன்னுமொரு வசனம் இதே கருத்தை மேலும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது:

''அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான்''

இந்த வசனம், ஆரம்பத்தில் உயிரினங்களின் தோற்றம் கடலிலிருந்தே நிகழ்ந்தது. அதாவது, உயிரினங்கள் நீரில் தோன்றின. பின்னர்தான் பலவகை உயிரினங்களும் உருவாகித் தரையிலும் பரவின என்ற நவீன விஞ்ஞானம் நிறுவ முயலும் கருத்தை விளக்குவதாகவும் அமையலாம். அல்லது ஒவ்வோர் உயிரினமும் நீரை அடிப்படைக் கூறாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் இருக்க முடியும்.

விஞ்ஞானிகள் பிற கிரகங்களில் நீர் இருக்கின்றதா என ஆராய்கின்றனர். ஏதேனுமொரு கோளில் நீர் இருப்பதாக அறிந்தால், அங்கே உயிரினமும் இருக்கக் கூடும் என ஊகிக்கின்றார்கள். வேறொரு வகையிற் சொல்வதானால், உயிரினம் இருப்பதற்கு நீரை ஓர் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். சந்திரனில் உயிரினம் இல்லை. ஏனெனில், அதனைச் சூழ ஒட்சிசனோ நீரோ கிடையாது. செவ்வாயில் சில வேளை உயிரினம் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஏனெனில், அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

நீர் அல்லாஹ்வின் மகத்தானதோர் அருட்கொடை என்பதை இவ்வுண்மைகள் விளக்கி நிற்கின்றன.

பருகுவதற்கு நீரை இன்பமானதாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கின்றான். அதனைக் கசப்போ உவர்ப்போ இன்றி ஆக்கி வைத்திருக்கின்றான். கடல் நீர் உப்புத் தன்மை வாய்ந்தது. அதனை உயிரினங்களால் பருக முடியாது. கடல் நீர் உப்புத் தன்மையை இழந்தால் அது கெட்டுப் போய்விடும். கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக்கப்டுகின்றது. இந்த ஆவி மேலே சென்று குளிர்ச்சி யடைந்ததும் மேகமாக மாறுகின்றது. மேகம் மேலும் மேலும் குளிர்ச்சியடைந்து மழை என்ற பெயரில் நன்னீராகப் பொழிகின்றது. அது உயிரினங்களுக்குப் பயன்படும் விதத்தில் ஆறாக ஓடுகின்றது. இந்தச் செயற்பாட்டை அல்லாஹுத்தஆலா இவ்வாறு விளக்குகின்றான்:

''நபியே! நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாகவும் அடுக்குகின்றான். பின்னர் அம்மேகங்களின் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கின்றீர். மேலும், அவனே வானத்திலுள்ள மேக மழைகளிலிருந்து ஆலங்கட்டியையும் பொழியச் செய்கின்றான். அதனை அவன் நாடியவர் மீது விழும் படி செய்கின்றான். அவன் நாடியவர்களை விட்டு அதனைத் திருப்பி விடுகின்றான். அதன் மின்னலின் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கின்றது.'' (ஸுறா அந்நூர் :43)

மேகங்களில் குறிப்பிட்டதொரு வீதத்தில் மின்னேற்றம் நடைபெறுகின்றது. இதனைத்தான் நாம் மின்னலாகவும் இடியாகவும் காண்கின்றோம். இது நேர் எதிர் மின் சக்திகளுக்கிடையே நடைபெறுகின்ற மிக நுணுக்கமானதொரு செயற்பாடகும். இந்நிகழச்சியில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்படுமாயின் தண்ணீரானது உவர் நீராக மாறிவிடும். அதனை விளக்கும் வகையில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

''நீங்கள் குடிக்கின்ற நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து நீங்கள் அதனைப் பொழிவிக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிவிக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி விட்டிருப்போம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?'' (ஸுரா அல்-வாகிஆ 68-70)

குடிக்கப் பயன்படும் நீர் தன்னுள்ளே கண்ணைப் பறிக்கும் மின்னலையும் காதைச் செவிடாக்கும் இடியையும் கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா?

''பளீரெனக் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகின்றான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும் ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும் அவன்தான் (நீர் நிறைந்த) கனமான மேகத்தையும் எழுப்புகின்றான்.'' (ஸுறா அர்-ரஃத் :12)

நீரின் முக்கியத்துவத்தை இவ்வாறெல்லாம் விளக்கும் அல்-குர்ஆன், அதன் ஆரம்பத் தோற்றத்தைப் பற்றியும் விளக்குகின்றது:

''நாம் தண்ணீரை வானத்திலிருந்து ஏராளமாகக் கொட்டினோம்'' (ஸுறா அபஸ :27)

நீரானது மழை என்ற உருவத்தில் வானத்திலிருந்து கொட்டுவதை இது குறிக்கின்றது என்று சாதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறே இந்த வசனம் நீரின் ஆரம்பத் தோற்றத்தைப் பற்றி விளக்குகின்றது என்றும் குறிப்பிட முடியும். ஏனெனில், இன்றுள்ள சமுத்திரங்கள் ஆரம்பத்தில் விண்வெளியில் தோன்றிப் பின்னர் பெரிய அளவில் பூமியில் இறங்கியதாக விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

பூமியானது சூரியனிலிருந்து பிரிந்த வேளையில் சுமார் 12 ஆயிரம் பாரன்ஹைட் பாகை சூடாக இருந்தது. அந்நேரத்தில் ஒட்சிசன், ஹைதரசன் போன்ற மூலகங்கள் தனித்தனியாகவே இருந்தன. எந்தவொரு இராசாயனக் கலவையும் உருவாகும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் பூமியானது படிப்படியாகக் குளிர்ச்சியடைய ஆரம்பித்த போது, மூலகங்களின் சேர்க்கைகள் ஏற்படலாயின. ஆனால், பல பொருட்களும் உருவாயின. புவியின் வெப்பமானது சுமார் 4 ஆயிரம் பாகை பாரன்ஹைட் நிலைக்கு வந்த போது, ஒட்சிசனும் ஐதரசனும் இணைந்து தண்ணீர் உருவானது. இச்சந்தர்ப்பத்தில் நீரானது மிகப் பெருமளவில் இருந்திருக்கும். இந்த வகையில், இன்றுள்ள எல்லாச் சமுத்திரங்களும் அண்டவெளியில் இருந்திருக்கும். பின்னர் புவியை நோக்கிப் பாரிய அளவில் இறங்கியிருக்கும். இவ்வாறு சில விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

''நாம் வானத்திலிருந்து நீரைப் பெரிய அளவில் கொட்டினோம்.'' என்ற திருவசனம் இந்த உண்மையைக் குறிப்பதாகவும் இருக்க முடியுமல்லவா?

நன்றி: www.sheikhagar.org

Tamilish

Monday, June 22, 2009


Kamal Uddin
was born on 28th June 1984. His family originates from Bangladesh, however among his family he was born in England. Kamal grew up in Hyde, a town in Greater Manchester.

In summer 1996 Kamal boarded an Islamic school in Bolton called Al Jamia-Al Islamiyya. He studied a course to memorise the whole Noble Qur'an. During the month of Ramadan in November 2000 halfway through his course, sadly his father Haji Malkas Ali passed away. By the grace of Allah at the end of 2001 Kamal finished his course and became a qualified Hafiz. Immediately after, The Hyde Jamia Mosque offered him to lead the next Ramadan prayers. At the time Kamal was only 17 years old. Having been successful he was offered to teach children at the Islamic Centre based in the Mosque and also to lead and call people to prayers. In September 2002 Kamal boarded Jamia Al-Karam in Retford to study Arabic grammar. After a year he returned back to Hyde Jamia Mosque to carry on his duties there.

Knowing at an early age his talent in reciting the Qur’an and singing Nasheeds, he opened a Nasheed class where young children can enjoy learning about Islam by singing Nasheeds and also a separate Hafiz class so he can teach others to memorise the Noble Qur’an like himself.

During January 2005, Kamal took his mother to Saudi Arabia, to perform the largest Islamic pilgrimage - Hajj. Having been inspired from his Hajj experience, Kamal started to compose his own lyrics for his first album. This was launched in August 2005 and became a huge success gaining Kamal his recognition as a Nasheed Artist after performing at the 1st Global Peace and Unity Event organised by the Islam Channel.

In May 2006, due to heavy demand from his listeners all over the world, Kamal released his second Album ‘Illallah’. This Album immediately became a bigger success selling in all leading Islamic stores. Shortly after in August, Kamal took a big step in his life and got married.

Kamal has taken part in many performances throughout the U.K and has impressed the internationally known propagator of Islam, Dr Zakir Naik, whilst performing during his talks. He has also had the honour to perform alongside other Nasheed artists such as Yahya Hawa, Ahmed Bukhatir, Zain Bhikha and many more. He is now working closely with IQRA Promotions, Sheffield on many new projects including his third Album along with a Nasheed Video.

An Imam, a Hafiz, a Haji and a Nasheed artist. A remarkable talented dear brother: Kamal Uddin.

Illallah Album

Kamal Uddin's Album "Illallah" is available to buy. The album features Quranic recitation, Supplications & 10 beautiful Nasheeds in the Arabic, English, Urdu & Bangla languages. Vist The Nasheed Shop to order your copy online or visit your local Islamic store.


Track

Lyrics with sample

01 Ar- Rahmaan
02 Supplications
03 Illallah
04 Durood and Salaam
05 Hain Nazar Main
06 Qasidah Burdah
07 Suffering
08 His name is Muhammad (pbuh)
09 Proud to be a Muslim
10 Unite
11 The 99 names of Allah
12 Subhanallah








Sami Yusuf

(born July 1980, Tehran, Iran) is a British Muslim singer-songwriter, who comes from a family of Azeri origin. Yusuf's music comprises mostly of songs to do with Islam and being a Muslim in today's world. He also deals with many social and humanitarian issues in his music. Presently, he is fast becoming a very popular figure in the Islamic world, having made videos for several of his tracks; according to The Guardian, he "has good claim to being the most famous British Muslim in the world". In 2006 Time Magazine called him "Islam's biggest rock star".

Biography

Sami Yusuf was born in 1980 in the city of Tehran, Iran. His parents moved to Britain when he was three, and he was raised in West London. At a very young age he started to play various musical instruments and enthusiastic in keeping interest in singing and composing. He was accepted as a composition student at the Royal Academy of Music in London. In addition to his education in Western harmonics and composition, Sami has a solid understanding of the Iranian and Middle Eastern modes (or Maqams) and is thoroughly acquainted and familiar with both East and Western musical traditions.[citation needed]

Career

Sami has been featured by Time Magazine as "Islam's biggest rock star" and has appeared on the covers of dozens of other mainstream publications around the world[citation needed]. Sami is devoutly spiritual and often uses his art and music as a means of promoting the messages of love, mercy, peace and tolerance, whilst encouraging the youth to be proud of their identity.[citation needed] Sami Yusuf’s songs have revolutionalized the nasheed industry and gave birth to a new genre of modern Islamic music.

2003-2005: First albums

Sami's first album Al-Mu'allim was self-produced and released in July 2003 and attained huge success. His second album, My Ummah, which was released in 2005, comes in two versions, a musical version and one with just percussion. He creates many of his songs in different languages mainly in English, Arabic, Urdu and Turkish and Persian. He has held concerts all around the world, and is albums were mainly popular among young Muslims, in particular Turkey, where his concert gathered up to 250,000 people, at Istanbul in 2007.

Disputed third album

A third album, Without You, was planned for release during mid-2008 but was delayed due to a contractual dispute. An album by that name was then launched by Awakening Records in January 2009. Sami Yusuf subsequently stated on his official website that this album was was released witout his consent, and is a compilation of demos and sketches with a quality inferior to his normally high standards. He has called for fans to boycott it. However as of April 2009 Awakening Records continues to feature the album prominently on the Sami Yusuf part of its website, saying that the album is "a complete and high quality album" consisting of "11 professionally recorded tracks". Awakening says it has already made "substantial" payments to Yusuf for his third album, which has been advertised on www.samiyusuf.com since May 2008. Yusuf had previously released two albums with Awakening, and signed for a total of five.
The album features eleven tracks by the artist, written in the languages English, Arabic, Urdu, and Turkish. The songs were all composed, arranged and recorded by Sami Yusuf, and the vocals are also Yusuf's.

Charity work

Sami is known for his charity work which he takes out of his own time to help the needy all around the world. In October 2007 Sami traveled to Sudan and visited Sudanese orphanage as part of support mission to raise awareness for sick children and AIDs victims in the region. Sami urged prayers for peace, recovery and donations through the Muslims to contact their local charities. This was after performing at Wembley Stadium where all profits went to Islamic Relief to help the crisis in Darfur. A year later, in October 2008 Sami traveled to South Africa and in between concerts on his South Africa tour, Sami took the time to visit and help cheer up the children at the The Agape Children’s Orphanage. In Jan 2009 Sami travelled to Turkey where he was invited by HE Emine Erdoğan, wife of the Turkish Prime Minister Recep Tayyip Erdoğan, to attend a rally in support of peace in Gaza. A month later, in February, 2009 Sami Yusuf has taken part in a Telethon to raise money for the victims of Gaza. The telethon took place in Doha, Qatar on 31 January, 2009 in conjunction with The Al Fakhoora Campaign to raise money for the bereaved and destitute of Gaza. To date over $100 million has been raised.[19]


Discography

Al-Mu'allim
• Released: July 2003
• Total Sales: More than 2 million
• Singles: "Al-Mu'allim" and "Supplication"

My Ummah
• Released: September 2005
• Total sales : More than 3 million
• Singles: "Hasbi Rabbi", "Mother" and "Munajat"

Without You
• Released: January 2009
• Total sales : 1,750,000
• Singles: "Asma Allah" "Forever Palestine”